
ஊன் மெழுகின்
மனத்திரியில்
காமச் சுடரை
ஏற்றுவது யார்?
விடைதெரியா குழப்பத்தில்
சூன்யமான இரவுகள்
அதிதீவிர யோசிப்பிலும்
அண்டாதது ஒரு
நடுநிசியில் ஞானோதயமாய்
தனக்குத் தானே சுடரெற்றி
ஊழித்தீயில் உருகும்
அதிசிய மெழுகு நான்.
சொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.
No comments:
Post a Comment