
ஆழமாய்
சிலவமயம் சிணுங்கலாய்
உதட்டில் தீட்டிய புன்முறுவலுடன்
நீயுதிர்ப்பாய் ஒற்றை எழுத்தில்
“ம்...”
அதனழகை கவியாக்கும்
ஆவலில் அவ்வெழுத்தின்
உட்புகுந்து
அதன் முடிவிலா பரிமாணங்களைக்
கண்டு மலைத்து களைத்து
வெளிவந்தேன்.
முயன்று தோற்றதன்
சிறுவிளக்கக் குறிப்பாய்
நானெழுதிய இக்கவிதையை
வாசித்ததும் அழகாய் சொல்வாய்
மீண்டுமொருமுறை
என் சிந்தையையும், நினைவுகளையும்
எந்நாளும் நிறைத்திடுமந்த
ம்... !
No comments:
Post a Comment