
பிரவாகமெடுக்கும் எனது
உணர்ச்ச்சித் துளிகளுக்கிடையே
நனைந்து விடாது சர்வ ஜாக்கிரதையாய்
என்னுள் வருகிறாய் என்னை மீட்டெடுக்க
எதனனின்று மீட்கப்போகிறாய் என்னை?
ஒரு வாழ்க்கையிலேயே
கோடி வாழ்க்கை வாழும் நான்
ஒன்றிலிருந்து மீண்டு என்னுமொன்றிற்கு
ஒவ்வொரு அந்தியிலும்
அடங்கும் ஆதவனின் பொற்கரங்கள்
என்னை உட்புகுந்த வாழ்வோடு அள்ளும்
மீட்டெடுக்க முயலாதே
உனக்கெங்கே புரியப்போகிறதென்
கற்பிதங்கள்
சில வேளைகளில்
எனக்கே புரியாத போது...
No comments:
Post a Comment