
உனக்கு முன்னே எனக்கு அறிமுகமானது
உன் பெயர்தான் என்றேன்
கண்கள் கூர்தீட்டி உதடுகள் சுழித்து
அதன்பின் நான்தானே என்றாய்
இல்லை யில்லை உன் கூந்தற்கொடியேறிய
மல்லிகையின் மணமென்றேன்
கைகளுக்கிடையில் கன்ன மேடுகள்
தாங்கி பிறகாவது நானா என்றாய்
அப்பொது மில்லை உன்னை வெயில் வருடி
தரையில் வரைந்த நிழற்படமென்றேன்
பொய்ச் சோம்பல் முறித்து காதுமடல் வருடியபடி
கேட்கிறாய் ;பிறகாவது நானா?
ம்... பிறகு நீதான் என்றென்
கண்களால் ஆயுதம் செய்யும்
சூத்திரமறிந்த நீ புரியாதது போல
பிறகாவது நானாவெனச் சிணுங்கிய
ஒவ்வொரு முறையும் என்னை
இழக்கவாரம்பித்திருந்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய்.
No comments:
Post a Comment