
கசையால் அடிக்கிறதென்னை காலம்
தன் நீட்சியால்
இருகை குவித்தள்ளிய குளத்துநீர்
விரலிடுக்கில் நழுவுதல் போல
கரைகிறதென் உயிர்
தேயும் ஊனுக்குள்ளே
கனவுகள் எல்லாம் தருகிறென்
மரணமே
ஆரத்தழுவியெனக்கு
ஒரு முத்தம் கொடு .
சொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.
No comments:
Post a Comment