
என் கவிதைகள்
உன்னிலிருந்து தான்
ஜனித்துக் கொண்டிருந்தன.
இப்போதுன் மௌனத்தினின்றும்
அருகிலிருக்கும் தூரத்தினின்றும்
அனுபவித்துணராத உன் ஸ்பரிசங்களினின்றும்
நிச்சயிக்கப்பட்ட விடுபடல்களினின்றும்
முன்தயாரிப்புள்ள விலகல்களினின்றும்
மற்றவரறியா உன் தயக்கங்களினின்றும் ...
No comments:
Post a Comment