
காய்ந்த சருகுகள்
இலக்கற்று திரிகின்றன
வீசும் காற்றின் இசை கோவைக்கேற்ப
முன்னேறி பின்னேறி
கவிழ்ந்துருண்டு கரணம் அடித்து
எதிர்வரும் சிறுமணற் பள்ளங்களை
லாவகமாய் கடந்தேறி
ஒன்று மற்றொன்றைத் துரத்தி
அணி சேர்ந்து ஒன்றுமற்ற மையத்தை
சுற்றி களிப்பாட்டம் ஆடி
இலக்கின்றியே திரிகின்றன...
இக்கவிதை பிப்’2011 "உயிர் எழுத்து" இலக்கிய இதழில்
வெளிவந்துள்ளது. வெளியிட்டமைக்கு நன்றி.
1 comment:
good one...:-)
Post a Comment