skip to main |
skip to sidebar
Posted by
வருணன்
at
6:07 AM
பம்பரம் விட்ட பால்ய நாட்கள்
திமிறித் திரிந்த இளமை முறுக்கு
யதார்த்தம் உறைத்த நடுத்தர வயது
சோர்ந்து சாய்ந்திருப்பினும்
அனுபவங்கள் புடமிட்ட முதுமை
சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தில்
வந்த பகுதி மீண்டு(ம்) வராமலேயே
எல்லாம் முடிந்து விடுகிறது
இமை மூடித் திறப்பதற்குள்.
Posted by
வருணன்
at
7:22 PM
ஊன் மெழுகின்
மனத்திரியில்
காமச் சுடரை
ஏற்றுவது யார்?
விடைதெரியா குழப்பத்தில்
சூன்யமான இரவுகள்
அதிதீவிர யோசிப்பிலும்
அண்டாதது ஒரு
நடுநிசியில் ஞானோதயமாய்
தனக்குத் தானே சுடரெற்றி
ஊழித்தீயில் உருகும்
அதிசிய மெழுகு நான்.
Posted by
வருணன்
at
8:52 AM
வெட்ட வெட்ட
வளரும் கறுப்பு
ராட்சஸர்களாய்
முடிவற்றவை போல
நீளும் நெடுஞ்சாலைகள்
சாலையெங்கும்
சீரான இடைவெளிகளில்
ரத்தக் கண்களுடன்
கண் சிமிட்டிடும்
பிரதிபலிப்பான்கள்
விரித்த கூந்தற் கிளைகளுடன்
இரு புறத்திலும்
வேலி கட்டும்
பெயர் தெரியா
பேய் மரங்கள்
எங்கே பிறந்ததென
விளங்காது
காற்றில் கரையும்
சில் வண்டுகளின்
ரீங்காரம்
எமனின் தூதுவர்களாய்
அசுரத்தனமாய்
எதிர் வரும்
கனரக வாகனங்கள்
நடுநிசிப் பயணம்
நன்றே
சாளரத்தின் வழியே
பார்வையை கசிய விடாதவரை.