skip to main |
skip to sidebar
Posted by
வருணன்
at
10:26 AM
புலால் உண்ணாத
புலன்கள் யாசித்தேன்
செத்துப்போ
என்றான் இறைவன்.
Posted by
வருணன்
at
10:07 PM
கசையால் அடிக்கிறதென்னை காலம்
தன் நீட்சியால்
இருகை குவித்தள்ளிய குளத்துநீர்
விரலிடுக்கில் நழுவுதல் போல
கரைகிறதென் உயிர்
தேயும் ஊனுக்குள்ளே
கனவுகள் எல்லாம் தருகிறென்
மரணமே
ஆரத்தழுவியெனக்கு
ஒரு முத்தம் கொடு .
Posted by
வருணன்
at
10:58 PM
என் கவிதைகள்
உன்னிலிருந்து தான்
ஜனித்துக் கொண்டிருந்தன.
இப்போதுன் மௌனத்தினின்றும்
அருகிலிருக்கும் தூரத்தினின்றும்
அனுபவித்துணராத உன் ஸ்பரிசங்களினின்றும்
நிச்சயிக்கப்பட்ட விடுபடல்களினின்றும்
முன்தயாரிப்புள்ள விலகல்களினின்றும்
மற்றவரறியா உன் தயக்கங்களினின்றும் ...