
ஒவ்வொரு அந்தியிலும்
பறந்து களைத்த பறவை
கூடடைவதைப் போல
தனிமை வந்தமர்கிறது
என் கிளைகளில்
மொழிகள் மறுதலித்த
அடர் மௌன வனத்தின்
ஒற்றை மரமாய்
கிளைகள் பரப்பி நான்.
சில்வண்டுகளின் ரீங்காரமோ
காற்றின் சிலும்பலோ
இலைகளின் நடனமோ
ஏதுமற்ற பேரமைதியில் வனம்.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(15.05.11)இணைய தளத்திற்கு நன்றி
3 comments:
மிக்க நன்றி தோழரே.
very nice kavithai varunan.
நன்றி ஷீலா.
Post a Comment