நகர் புகுதல்

Thursday, May 26, 2011




அர்த்தமிழந்த வார்த்தைகள்
சமைக்கும் தருக்கச் சகதியுள்
அமிழ்ந்தென்ன லாபம்
துடிதுடிக்க காலத்தைக்
கொல்வதைத் தவிர
கால்களையும் கைகளையும்
குரல் வளையையும் சுற்றியிறுக்கும்
மொழியின் வேர்களும் கொடிகளும்
மண்டிய வனம்
சொற்களுக்கு அனுமதியில்லா
நகரமொன்று வேண்டும்
வன வாசம் துறந்து
நகர் புக.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(22.05.11) இணைய தளத்திற்கு மனமார்ந்த நன்றி.

5 comments:

Anonymous said...

வாசித்தேன்ரசித்தேன் .....வனவாசம் துரத்து நகர புக ..நகருக்கு வர போறிங்களா வேண்டாம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான சிந்தனை..

வருணன் said...

தோழர்கள் சிவா மற்றும் சௌந்தருக்கு மனமார்ந்த நன்றி.

ஹேமா said...

அழகான தமிழ் வார்த்தைகள்.ரசித்தேன் !

வருணன் said...

நன்றி ஹேமா.

நன்றி தோழரே [ரத்னவேல்].

Post a Comment