
தேவதை கதைகளில் மட்டுமே
இப்போதெல்லாம் உன்னை
கேட்கவும் பார்க்கவும் முடிகிறது.
நிர்பந்திக்கும் பணி நிமித்தமாய்
பல மைல்களுக்கப்பால்
நீயும் நானும்.
நமக்கு ஒரு சேர வாய்த்திருக்கும்
பிடிவாதத்தினாலும், அசாத்திய
பொறுமையினாலும் நம்மிடையெ
உள்ள தொலைவினை
அளந்தபடி நாம்.
நம்மிடையேயானை இருப்பை
சொல்லும் போது மட்டும் பிரிவென்னும்
வார்த்தை வாக்கியமாய் வளர்கிறது.
நாள்தோறும் விசித்திர விளையாட்டுகளை
காட்டியபடி தானிருக்கிறது
நம்மிடையேயுள்ள தூரம்.
தொலைவாய் செல்லச் செல்ல
என்னுள்ளே ஊடுருவிக் கலக்கும்
முரண் புதிராய்...
என் தீவின் கரைதனில் கன்னங்களில்
கைகள் பதித்தபடி நான்...
ஏதோ ஒரு நாள் வரக்கூடிய உன்
தோனியின் வரவை எதிர்நோக்கியபடி.