சொல்லவியலாதது

Saturday, June 26, 2010



எனக்கு அருகிலேயே நீயிருந்தும்
உன்னை சந்திக்கமுடியாத சூழலில்
ஏதோ சொல்லவியலா காரணத்தால்
தன் கூட்டை அண்டாத பறவையின்
நிம்மதியின்மையை ஒத்த ஒன்று
பற்றிக் கொள்ளும் இருதயத்தை
கூடவே வந்து சேரும்
ஈன்ற குட்டியை மறுகணமே பிரிந்திடும்
தாய் நாயின் வருத்தங்களை ஒத்ததொரு
வெறுமை.

மீட்சி

Wednesday, June 23, 2010



பிரவாகமெடுக்கும் எனது
உணர்ச்ச்சித் துளிகளுக்கிடையே
நனைந்து விடாது சர்வ ஜாக்கிரதையாய்
என்னுள் வருகிறாய் என்னை மீட்டெடுக்க

எதனனின்று மீட்கப்போகிறாய் என்னை?

ஒரு வாழ்க்கையிலேயே
கோடி வாழ்க்கை வாழும் நான்
ஒன்றிலிருந்து மீண்டு என்னுமொன்றிற்கு

ஒவ்வொரு அந்தியிலும்
அடங்கும் ஆதவனின் பொற்கரங்கள்
என்னை உட்புகுந்த வாழ்வோடு அள்ளும்

மீட்டெடுக்க முயலாதே

உனக்கெங்கே புரியப்போகிறதென்
கற்பிதங்கள்
சில வேளைகளில்
எனக்கே புரியாத போது...

பதில்

Tuesday, June 22, 2010





புலால் உண்ணாத
புலன்கள் யாசித்தேன்
செத்துப்போ
என்றான் இறைவன்.