
செவிகள் செரிக்காத இசை
விழிகள் புசிக்காத கவிதை
நினைவுகள் தளும்பாத மனது
கனவுகள் கலையாத இரவு
இவையெல்லாம் அழகுதான்
கூடவே சேர்த்துக் கொள்ளலாம்
அறியாதவருக்காய் வழியும்
ஒரு துளி கண்ணீரையும்.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(27.12.10) இணைய தளத்திற்கு நன்றி
சொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.

