skip to main |
skip to sidebar
Posted by
வருணன்
at
9:32 PM
நீ பருகும் நீராய் மாறி
உனக்குள் புகுவேன்
வியர்வைத் துளியாய்
உன் மீது வழிவேன்
அமரும் இருக்கையாகி
உன்னை உள்வாங்கி அணைப்பேன்
யாக்கை யுடைத்து
வளியாய் மாறி
உன்னுள் புகுவேன்
தென்றலாய் மாறி உன்
குழல் கலைத்து அதனுள்
கரைவேன்
உன்னோடிருத்தல்
மட்டுமே முக்கியம்
எதுவாய் என்பதல்ல.
Posted by
வருணன்
at
5:34 PM
ஓங்கி வளர்ந்த நெல்மணிகள்
சிரம் தாழ்த்திப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
வேர்க் கண்ணாடிகளில்
பிரதிபலிக்கும்
உழவுக் கிழவர்களின்
முரட்டு உழைப்பை
நிலங்கள் மாறினாலும்
உழைத்துக் கொண்டுதானிருக்கின்றனர்
இடைவிடாது
மண் புழுக்களுடன்
சேர்ந்து சில மனிதர்களும்
இங்கெ...
Posted by
வருணன்
at
9:55 PM
வெளிநாட்டு வேலை
கைகொள்ளா ஊதியம்
தெரியாத ஆட்கள்தான்
அன்புக்கு ஏக்கம்தான்
பரவாயில்லை...
தேற்றுவதற்கு
டாலர் கடவுள்
இருக்கிறான்!
அபரிவிதமாய் கிடைத்தது
வகை வகையாய்
உணவும்
விதவிதமாய்
உடையும்
கொண்டு வந்து கொட்டியது
சகலத்தையும்
டாலர் குப்பை
எப்போதாவது
நினைவிற்கு வரும்
அன்னை ஆசையோடு
பிசைந்து கொடுக்கும்
சாம்பார் சாதம்...
கண்கள் குளமாகும்
அவ்வப்போது தோன்றும்
அவசரப்பட்டு ஆசையில்
விழிகளை விற்று
வானவில் வாங்கிவிட்டேனோ?