skip to main |
skip to sidebar
Posted by
வருணன்
at
7:00 PM

வார்த்தைகளால் என்னை விஞ்சிட
முடியாதென்றுனக்கு
தெரிந்ததாலோ என்னாவோ
உன் கயல்விழிகளின்
ஒற்றைப் பார்வையிலென்னை
மௌனியாக்குகிறாய்
நம் ஒவ்வொரு சந்திப்புகளிலும்
உறைந்த என் மௌனத்தின்
வெடிப்புகளினின்று கசிந்து
வழிந்தபடி என் காதல் மட்டும்...
வார்த்தைகளற்றுப் போன நம் உலகில்
பிறகெப்படிப் பிறந்திடும்
வெற்றிகளும் தோல்விகளும்?
Posted by
வருணன்
at
9:56 PM
அன்னையர் தினம்
காதலர் தினம்
நண்பர்கள் தினம்
தந்தையர் தினமென
இன்னும் பிற தினங்களுண்டு
வாழ்த்து அட்டைகள்
பரிசுப் பொருட்கள்
பொம்மைகள், இனிப்புகள்
இத்யாதிகளென
இன்னும் பல உண்டு...
எனக்கோ எல்லாமுமாய் நீயிருக்க
எத்தினத்தில்
உனக்கிவைகளை நானளிப்பேன்?!
Posted by
வருணன்
at
9:56 PM
அவள் விழி குளத்தினுள்
நீராடும் என்னையும்
அதன் கரையோரங்களில்
தளும்புமவள் கனாக்களையும்
அன்னல் யான் நோக்கினேன்
அவள் நோக்கா தருணங்களில்
மஞ்சமென நினைத்தென்
மடிதனில் நீ கிடக்கையில்
நின் விழிதனில் மின்னும்
அதே கனவுகளும் ஆசைகளும்
யாதுமானவன் எனக்கு நீயென
வாழ்ந்திடுமென் சகியுனக்கு
வேறெதனைச் சிறப்பாய்
அளித்திட முடியும்
என்னைத் தவிர...?